ஏப்ரல் 1 முதல் EPFO, FASTag ல் அமலுக்கு வரும் புதிய விதிகள் – முழு விவரம் இதோ!

0
ஏப்ரல் 1 முதல் EPFO, FASTag ல் அமலுக்கு வரும் புதிய விதிகள்

அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளது. இந்த நேரங்களில் பல்வேறு விதமான மாறுதல்கள் நிகழும். அதாவது, NPS, EPFO, FASTag மற்றும் பணம் தொடர்பான விதிகளில் பல மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களைப் பற்றிய முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

EPFO இன் புதிய விதி:

ஏப்ரல் 1 முதல், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய உள்ளது. அதன்படி, புதிய விதியின் கீழ், ஒரு சந்தாதாரர் வேலையை மாற்றும்போது, அவருடைய பழைய வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) இருப்பு தானாகவே புதிய நிறுவனத்திற்கு மாற்றப்படும். அதாவது, EPFO கணக்கு வைத்திருப்பவர், புதிய பணியமர்த்தும்போது, PF தொகைகளை மாற்றக் கோர வேண்டிய அவசியமில்லை.

புதிய வரி விதிப்பு:

புதிய வரி விதிப்பு ஏப்ரல் 1, 2024 முதல் இயல்புநிலை வரி விதியாக அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, வரிகளை தாக்கல் செய்யும் போது பழைய வரி முறையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறை தானாகவே தேர்ந்தெடுக்கப்படும்.

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.21,215/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஃபாஸ்டாக்:

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டாக் விதிகளும் மாற உள்ளன. மார்ச் 31, 2024க்குள் உங்கள் Fastag இன் KYC செயல்முறையை நீங்கள் முடிக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் உங்கள் FASTagல் இருப்பு வைத்திருந்தாலும், பணம் செலுத்தப்படாது, மேலும் நீங்கள் டோல் பிளாசாக்களில் இரட்டிப்பு டோல் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

NPS விதியில் மாற்றங்கள்:

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) மாற்றம் இருக்கும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), NPS ஐ நிர்வகிக்கும் உச்ச அமைப்பானது, NPS இன் தற்போதைய உள்நுழைவு செயல்முறையில் மாற்றங்களைச் செயல்படுத்தும். இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!