ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0

ரயில்களில் மீண்டும் பழைய கட்டணம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரயில்களில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவையும் தற்போது பிறப்பித்துள்ளது.

மீண்டும் பழைய கட்டணம்:

கொரோனா காலத்தில் சாதாரண பயணிகள் ரயிலில் விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் பழைய கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் பயணிகளின் கூட்டத்தை குறைக்க, சிறப்பு விரைவு ரயில் என அறிவிக்கப்பட்டு இரண்டு மடங்காக கட்டணம் வசூலிக்கப்பட்டது .கொரோனா காலத்திற்கு பின்பும் கட்டணம் குறைக்கப்படாமல் இருந்ததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

முதலீடு செய்ய திட்டமிடுபவரா நீங்கள்? சூப்பர் பென்சன் திட்டங்கள் இதோ!

அதிகரிக்கப்பட்ட ரயில் கட்டணத்தை குறைக்க பல்வேறு முறை பயணிகள் வலியுறுத்தினர். அதன்படி சாதாரண பயணிகள் ரயில்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் பழைய கட்டணம் வசூலிக்கப்படும் எனும் தென்னக ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!