ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு – மீறினால் நடவடிக்கை.. தாலிபான் எச்சரிக்கை!

0
ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு - மீறினால் நடவடிக்கை.. தாலிபான் எச்சரிக்கை!
ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு - மீறினால் நடவடிக்கை.. தாலிபான் எச்சரிக்கை!
ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு – மீறினால் நடவடிக்கை.. தாலிபான் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆப்கான் பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வெழுத தடை:

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ படைகள் வெளியேறியதை அடுத்து தீவிரவாத அமைப்பான தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பெண்கள் கல்வி கற்க கூடாது என்று தாலிபான் அரசு உத்தரவிட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதனை தொடர்ந்து பெண்கள் பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அண்மையில் பெண்கள் உயர்கல்வி கற்க தாலிபான் அரசு தடை விதித்தது. இதற்கு ஐ. நா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்க கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை திட்டம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இது குறித்து பேசிய உயர் கல்வி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆப்கான் பெண்கள் முதுகலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்கள் இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!