தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை திட்டம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை திட்டம் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை திட்டம் - அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை திட்டம் – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். இந்த உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும் என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை:

தமிழ்நாட்டில் ஆதரவின்றி தவிக்கும் முதியவர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.. இதன் மூலம் 60 வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் கடந்த வருடங்களில் சிலருக்கு உதவித்தொகை ரத்து செய்யப்பட்டது.

முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை- தளர்வுகள் அளித்து யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!

இதனால் முதியவர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து ஆராய்ந்து கடந்த 2022ம் ஆண்டு உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அத்துடன் உதவித்தொகை பெற தகுதி பெற்ற நபர்கள் கண்டறியப்பட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் முதியோர் உதவித்தொகை குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஐ. பெரியசாமி 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 60 வயதை தாண்டிய அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!