தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!
தமிழக மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் தடுப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த மூன்று வார காலத்திற்கும் மேலாக வைரஸ் தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாதிப்பு குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
LPG வர்த்தக சிலிண்டர் விலை ரூ.84 அதிகரிப்பு – ரூ.1,687.50 ஆக நிர்ணயம்!
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வரும் ஜூலை 5ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று (ஜூலை 2) முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின் ஊரடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதன்படி தளர்வுகளினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் தொற்று பரவல் தடுப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று லேசாக அதிகரித்தோ அல்லது குறையாமலோ அப்படியே உள்ளன என்றும் தெரிவித்தார்.