தமிழக அரசு கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிளும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பது குறித்து அரசு முறையாக அறிவிக்கவில்லை.
இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் – பஜாஜ் நிறுவன தலைவர்!
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் 13 பல்கலை துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறியதாவது, அனைத்து பல்கலையிலும் எம்ஃபில் படிப்பு தொடரும் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசு கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை துவங்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கை அனைத்து பல்கலையிலும் ஒரே மாதிரி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அவர்கள் கூறியதாவது, கல்லூரிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.