இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் – பஜாஜ் நிறுவன தலைவர்!

0
இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் - பஜாஜ் நிறுவன தலைவர்!
இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் - பஜாஜ் நிறுவன தலைவர்!
இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் – பஜாஜ் நிறுவன தலைவர்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவராக திகழும் ராகுல் பஜாஜ் அவர்கள் தனது கடைசி கடிதம் வாயிலாக நாட்டில் இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

இந்திய வாகன சந்தையில் மிக முக்கிய நிறுவனமாக பஜாஜ் ஆட்டோ திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக ராகுல் பஜாஜ் அவர்கள் திகழ்ந்து வந்தார். சுமார் 50 ஆண்டு காலமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் வகித்து வருகிறார் ராகுல் அவர்கள். தற்போது இவருக்கு 83 வயது. இந்நிலையில் இவர் தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதையடுத்து தலைவராக தனது பங்குதாரர்களுக்கு கடைசி உரையை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஜூலை 16 வரை அரசுப்பணியாளர் தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!

அந்த கடிதத்தில் ராகுல் அவர்கள் கூறியதாவது, நாட்டில் தடுப்பூசி போடுவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அடுத்து வரும் கொரோனா அலையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இதற்கு முன்பு போல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என்று நம்புகிறேன். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

TN Job “FB  Group” Join Now

இதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஊரடங்கு பொருளாதாரத்தை நிச்சயமற்ற நிலைக்கு கொண்டு வந்தன. அதுமட்டுமல்லாமல் ஏழை எளிய மக்கள், தினக்கூலிகள் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே வரும் காலங்களில் ஊரடங்கு இன்றி நிலையை சமாளிக்கலாம் என்று நம்புகிறேன் என்று தனது கடிதத்தில் உருக்கமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!