தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்கல் – இன்று முதல் துவக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் மாணவ மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரவலும் முழுவதும் கட்டுக்குள் வராததன் காரணமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டன. இந்நிலையில் புதிய கல்வியாண்டு தொடங்க உள்ளதால் இன்று முதல் (ஜூன் 14) பள்ளிகளை திறந்து அதற்கான பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று திறப்பு – போலீஸ் பாதுகாப்பு!
தற்போது இன்று முதல் அனைத்து தலைமை ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும் பள்ளிக்கு வர வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கை மற்றும் மாணவ மாணவியர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த 7 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பள்ளிக்கு வந்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. அதற்கேற்ப அந்தந்த வகுப்புகளில் மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அந்த மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடும் பணியும் இன்று தொடங்க உள்ளது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.