தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று திறப்பு – போலீஸ் பாதுகாப்பு!
தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வாக இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ளது. இதை அடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் இன்று (ஜூன் 14) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா பாதிப்புகள் குறைவாக காணப்பட்டு வரும் 27 மாவட்டங்களில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மதுக்கடைகளில் எந்த ஒரு பிரச்சனையும் நிலவாமல் இருக்க மதுக்கடைகளில் போலீஸ் பாதுகாப்பு விதிப்பது குறித்து கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலஅவகாசம்? பொதுமக்கள் கோரிக்கை!
இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமிஷனர் கூறியதாவது, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு போலீஸ் தக்க உதவிகரமாக இருப்பார்கள் என்றும் கடைகளுக்கு மது வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களுக்கு மது வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் கடைகளுக்கு வெளியே பாதுகாப்பு தடுப்பு போடப்பட்டிருக்கும் என்றும் கூட்டம் அதிகமாக இருந்தால் தனியாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு வாடிக்கையாளர்களை அங்கு காத்திருக்க வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குனர் கூறியதாவது, கடைக்குள் 2 பணியாளர்களும் வெளியே 2 பணியாளர்களும் நிறுத்தப்படுவர். வெளியே உள்ள பணியாளர்கள் போலீசுக்கு உதவி செய்யும் வகையில் பணி செய்வர். மேலும் உள்ளே பணிபுரியும் ஊழியர்களுக்கு விரைவாக மது வழங்கி கூட்டத்தை தவிர்க்கும் முறையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.