தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கூடுதல் காலஅவகாசம்? பொதுமக்கள் கோரிக்கை!
தமிழகத்தில் மே மாத மின்கட்டணம் செலுத்த கொடுக்கபட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. மேலும் கட்டணம் செலுத்துவதில் மக்களுக்கு குழப்பங்கள் நீடிக்கிறது. இதனால் மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின் கட்டண கால அவகாசம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் வாரியம் மே மாதம் மின் கணக்கீடு செய்யப்பட மாட்டாது என அறிவித்தது. அதற்கு பதிலாக கடந்த வருடம் (2020) மே மாதம் செலுத்திய மின்கட்டணத்தை இந்த வருடம் மே மாத மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இந்த முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வருடம் குறைவாக மின் உபயோகம் செய்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை வரும் என தெரிவித்தனர்.
இன்று முதல் இரவு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
இதனால் நடப்பாண்டு மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 சலுகைகள் வழங்கப்பட்டது. கடந்த வருட மே மாத தொகையை செலுத்துவது அல்லது இந்த வருடம் மார்ச் மாத தொகையை மே மாத கட்டணமாக செலுத்துவது அல்லது வீட்டின் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பி அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு செலுத்தலாம் என்ற சலுகைகளை தமிழ்நாடு மின்வாரியம் அளித்தது.
TN Job “FB Group” Join Now
இந்த சலுகைகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை. ஏனெனில் மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து அனுப்பியும் மக்களுக்கு இதுவரை மின் கட்டணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக மின் கட்டணம் எவ்வளவு என்று தெரியாமல் ஏராளமானோர் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். எனவே மின் கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.