தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக CBSE தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான கல்லூரி சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இன்றுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை இன்றுடன் (ஜூலை 27) முடிவடையுள்ளது.
கல்லூரிகளில் சேர்க்கை
கடந்த இரண்டு வருட காலமாக உலகையே ஆட்டி படைத்த கொரோனா நோய் தொற்று நடப்பு ஆண்டில் ஓரளவு குறைந்து வரும் நிலையில் அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டு அனைவரின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கி உள்ளது. குறிப்பாக மாணவர்களது கல்வி நலனை கருத்தில் கொண்ட தமிழக அரசு முன்னேற்பாடுகளாக பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி பள்ளிகளும், கல்லூரிகளும் மீண்டும் திறப்பதற்கு வழி வகை செய்துள்ளது. அவ்விதமாக அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நல்முறையில் ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி & சம்பள உயர்வு!
மேலும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானதை அடுத்து அவர்களது இளநிலை படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 22 முதல் தொடங்கப்பட்டது. அவற்றில் குறிப்பாக மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர்வதிலே அதிக ஆர்வம் இந்த ஆண்டு காட்டுவது போல் தெரிய வருகிறது. ஏனெனில், கடந்த ஆண்டு 3 லட்சம் பேர் அரசு கல்லூரிகளில் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 1494 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், சென்னை, கோவை, மதுரை உட்பட 9 மண்டலங்களின் கீழ் இயங்கும் 164 கல்லூரிகளில் மொத்தம் 96 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், விண்ணப்ப பதிவு இன்றுடன் (ஜூலை 27) முடிவுக்கு வர உள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது CBSE பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியான பிறகு மீண்டும் 5 நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டு மாணவர்களிடம் இருந்து சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனிடையே விண்ணப்பத்தை பதிவு செய்தும் பூர்த்தி செய்து அனுப்பாமல் இருக்கும் மாணவர்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவுக்கு வர இருப்பதால் அனைத்து மாணவர்களும் இதனை கருத்தில் கொண்டு விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.