மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 4% அகவிலைப்படி & சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடிய விரைவில் அகவிலைப்படி மற்றும் சம்பள உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏஐசிபிஐ குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருவதனால் 4% வரைக்கும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, எப்போதுமே மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது, நாட்டில் பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக அதனை சரிசெய்யும் பொருட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும்.
தமிழக பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தற்போது வரைக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என்கிற அளவில் அகவிலைப்படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% வரைக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டால் DA 38 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்குவது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், ஏஐசிபிஐ குறியீடு உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தால் 4% வரைக்கும் DA உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில் 4% அகவிலைப்படி சம்பள உறவு வழங்கப்பட்டால் மாதம் ரூ 6840 கிடைக்கும் எனவும், ஆண்டு ஊதிய உயர்வு ரூ 27,312 ஆக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.