தனியார் கல்லூரிகளில் அதிக கல்வி கட்டணம்? மத்திய அரசின் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளில் அதிகமான கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றினை விதித்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கல்வி கட்டணம்
இந்தியாவில் பல மருத்துவ கல்லூரிகள் தனியார் மயமாக செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் கவுன்சிலிங் என்று கூறப்படும் கலந்தாய்வின் மூலமாக தான் நிரப்பப்படுகிறது. தனியார் கல்லூரிகள் மட்டுமின்றி பல்கலைக்கழங்களிலும் நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணமே வசூல் செய்யப்படுகிறது. இந்த கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய அரசின் சார்பாக நிர்ணய குழு அமைக்கப்பட்டது.
அடுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு!ஓமிக்கரான் பரவல் எதிரொலி!
அந்த நிர்ணய குழு பல வித ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது 26 புதிய பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதில் முக்கியமாக தனியா கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெரும் கல்வி கட்டணம் குறித்த பரிந்துரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் உள்ள 50 சதவீத இடங்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் விதிக்கும் கல்வி கட்டணத்தை தான் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – மீண்டும் உயர்த்தப்பட உள்ள சம்பளம்!
கூடுதலாக, அரசு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், கல்லூரியின் மொத்த சீட்களின், 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், மீதமுள்ள இடங்களுக்கு தகுதி அடிப்படையில் இந்த சலுகையை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் இந்த பரிந்துரைகளுக்கு செவி சாய்த்துள்ளது. இதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பு தங்களது ஆதரவுகளை தெரிவித்து இருக்கின்றனர்.