அடுத்த 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு!ஓமிக்கரான் பரவல் எதிரொலி!
கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸான ஓமிக்கிரான் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் மூடப்படும் என்பது போன்ற புதிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் மூடல்
கொரோனா என்ற நோய் தொற்று கடந்த 2020ம் ஆண்டு முதல் அனைத்து நாடுகளை அச்சுறுத்தியது, தொடர்ந்து இந்த வைரஸின் 2ம் மற்றும் 3ம் அலை பரவி மக்களை பாதித்து வருகிறது. தற்போது இந்த வைரஸ் ஓமிக்கரான் என்ற பெயரில் உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் பல நாடுகள் கடுமையான ஊரடங்கு விதிகளை விதித்து வருகிறது. அது மட்டுமின்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடவும் உத்தரவு பிறப்பித்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – மீண்டும் உயர்த்தப்பட உள்ள சம்பளம்!
அந்த வகையில் பங்களாதேஷ் நாட்டில் கடுமையாக ஓமிக்கரான் பரவல் பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அந்த நாட்டு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி உள்ளது. அந்த நாட்டில் தற்போது வரை 35 சதவீத மக்கள் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு இருக்கின்றனர். கடந்த மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இந்த உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (பிப். 6) லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
பங்களாதேஷ் நாட்டில் தற்போது வரை 1.8 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி 28 ஆயிரம் மக்கள் இந்த நோய் பரவலால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த மாதங்களை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் ஊரடங்கு கடுமைக்கப்பட்டுள்ளது.