தமிழக அரசு ஓட்டுநர் & அலுவலக உதவியாளர் வேலை 2020
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர்-1 மற்றும் ஈப்பு ஓட்டுநர் – 1 பணியிடங்கள் (காலமுறை ஊதியம்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் பெற்று 09.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் & ஈப்பு ஓட்டுநர் |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 09.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அலுவலக உதவியாளருக்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநருக்கான தகுதிகள்:
- விண்ணப்பதாரர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- LMV ( இளகு ரக அல்லது கனரக ) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- இரண்டு ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் வாகன சட்டம் Act 1988 (Central Act 59 of 988) இதன்படி ஓட்டுரிமை பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் பொறிமுனைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
ஆதி திராவிடர் நலத்துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 09.12.2020-க்குள் விண்ணப்பித்திட சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்