தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்? மருத்துவ குழு பரிந்துரை!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட வேண்டாம் என இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக தற்போது 27 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகளை தமிழக அரசு ஜூன் 14 ஆம் தேதி முதல் அமல்படுத்தியது.
கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்து தவிர்ப்பு – IMC அறிவிப்பு!
ஆனால் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 21க்கு பிறகு தளர்வுகள் வழங்குவது குறித்து இன்று மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்க வேண்டாம் என மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள், மால்களை திறக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.