வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு – இன்றைய பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு !

0
வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு - இன்றைய பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு !
நேற்றைய நிதிநிலை பட்ஜெட்டை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை அமைச்சர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இன்றைய பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு:

38,194 கோடி ரூபாய் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முறை ரூபாய் 4281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை விட இந்த முறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் விவசாயத்திற்கான இலவச மின்சாரம் வழங்க ₹7,280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 23.5 ஒரு லட்சம் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தற்போது வரை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆடு மாடு, கோழி மீன் வளர்ப்பு இருக்கு முதலீட்டு கடன்களுக்கான வட்டி மானியத்திற்கு ரூபாய் 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் முல்லை பூங்கா ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்க ரூபாய் 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!