நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை – ICU வில் இருந்து மாற்றம்!
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு விபத்துக்குள்ளானார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் முடிந்துள்ள நிலையில் ICU வார்டில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.
யாஷிகா ஆனந்த்:
சின்னத்திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை யாஷிகா, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த 24 ஆம் தேதி அன்று நள்ளிரவில் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் பகுதியில் காரை ஓட்டி வந்த போது, எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டது. அந்த விபத்தில் நடிகை யாஷிகாவுடன் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1.5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – சவூதி அரசு அறிவிப்பு!
ஹைதராபாத் நகரத்தை சேர்ந்த இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறை காரணமாக இந்தியா வந்த பவானி தோழி யாஷிகாவை காண சென்னைக்கு வந்துள்ளார். அப்போது தான் இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா, செய்யது, அமீர் உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதில் இடுப்பு மற்றும் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதால் யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
எனினும் யாஷிகாவுக்கு 3 மாத ஓய்வு கட்டாயம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே சுய நினைவு பெற்றவுடன் யாஷிகா, தனது தோழியை பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால், அதிர்ச்சியான தகவலை யாஷிகாவிடம் சொல்ல கூடாது என்ற காரணத்தால் பவானி மரணம் குறித்து அவரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே விபத்து தொடர்பாக யாஷிகாவின் நண்பர் நந்தகுமார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதால், யாஷிகா மீது 3 வழக்குகள் பதியப்பட்டு ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.