1.5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – சவூதி அரசு அறிவிப்பு!
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமலில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கான தடையை சவூதி அரசு நீக்கியுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அனுமதி வழங்கி இருக்கிறது.
சுற்றுலா பயணிகள்:
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் கடந்த 2020ம் ஆண்டு முதல் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. 2020 மார்ச் மாத தொடக்கத்தில் பாதிப்பு தீவிர நிலையை அடைந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் மற்ற நாடுகளுடனான போக்குவரத்தை தடை செய்தது. தங்கள் நாட்டின் எல்லையில் தீவிர கண்காணிப்பு சோதனைகளை செய்து வந்தனர். அனைத்து உலக நாடுகளில் இருந்தும் அதிக அளவிலான இஸ்லாமிய மக்கள் சவூதி அரேபியா நாட்டிற்கு புனித பயணம் மேற்கொள்வார்கள். இதனால் அங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 20க்கு பின்னர் பள்ளிகள் திறப்பு? பெற்றோர்களிடம் கருத்து கேட்க திட்டம்!
கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகளின் வருகையை அரசு தடை செய்தது. இதனால் அங்கு கடந்த ஆண்டு ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைக்காக உள்நாட்டில் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நடப்பாண்டில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்து.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், கடந்த வாரத்தில் ரெட் லிஸ்ட் நாடுகளின் பட்டியலை சவுதி அரசு வெளியிட்டது. அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. ரெட் லிஸ்ட் நாடுகளுக்கு தங்கள் நாட்டினர் பயணிக்க அரசு தடை விதித்தது. இதனை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பயண தடையும் விதித்து அறிவிப்பை வெளியிட்டது. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலாவை தீவிரப்படுத்த சவூதி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமெரிக்கா, சீனா மற்றும் 49 ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களுக்கு சவூதி அரசு அனுமதி அளித்துள்ளது.