புதிய சீரியலில் களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா நக்ஷத்ரா – அடாவடி பெண்ணாக அவதாரம்!

0
புதிய சீரியலில் களமிறங்கும் 'யாரடி நீ மோகினி' வெண்ணிலா நக்ஷத்ரா - அடாவடி பெண்ணாக அவதாரம்!
புதிய சீரியலில் களமிறங்கும் 'யாரடி நீ மோகினி' வெண்ணிலா நக்ஷத்ரா - அடாவடி பெண்ணாக அவதாரம்!
புதிய சீரியலில் களமிறங்கும் ‘யாரடி நீ மோகினி’ வெண்ணிலா நக்ஷத்ரா – அடாவடி பெண்ணாக அவதாரம்!

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நக்ஷத்ரா. அவர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் களமிறங்க இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

நடிகை நக்ஷத்ரா:

யாரடி நீ மோகினி சீரியல் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்தது. இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நக்ஷத்ரா நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக முத்தரசாக சஞ்சீவ் நடித்து வருகிறார். ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ரசிகர்களிடம் எப்படி முடிக்க வேண்டும் என கருத்து கேட்டு இரண்டு முடிவு காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் இறுதி காட்சிகள் பிரமிக்க வைக்கும் அளவிற்கு பிரமாண்டமாக எடுக்கப்பட்டது.

கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு – ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

இந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்த நக்ஷத்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் கிடைத்தது. அவரது சொந்த ஊர் கேரளா. இவர் கிடா பூசாரி மகுடி என்ற படம் மூலமாக தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின் அவருக்கு யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் தனது நடிப்பு திறமையால் 1000 எபிசோடுகளை தாண்டி அந்த சீரியல் வெற்றி பெற்றது. அந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது அவர் கலர்ஸ் தமிழில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து அதிகாரபூர்வ ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டது.

திடீரென நிறுத்தப்பட்ட ஜீ தமிழ் & விஜய் டிவி சீரியல்கள் – ரசிகர்கள் அதிர்ச்சி!

வெண்ணிலா கதாபாத்திரத்தில் அப்பாவியாக முத்தரசை உருகி உருகி காதலித்த அவர் இந்த சீரியலில் அப்படியே எதிர் மறையாக வட்டி வாங்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த சீரியலுக்கு வள்ளி திருமணம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடாவடி பெண்ணாக இருப்பதால் வள்ளிக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்க அவர் அம்மா ஒழுக்கமாக நடந்து கொள்ள சொல்கிறார். வள்ளி அடாவடி தனம் செய்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். அவர் மனதிற்கு ஏற்றார் போல மாப்பிள்ளை வருவாரா என்பதே கதை. மேலும் இந்த சீரியலில் வள்ளிக்கு அம்மாவாக நடிகை நளினி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!