உடன்பிறந்த சகோதரிகளை வறுத்தெடுத்த நடிகை வனிதா – வைரல் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமாக சர்ச்சைக்குரிய பிரபலமாக இருந்து வந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு செய்தியினை பதிவிட்டு தனது சகோதரிகளை வறுத்தெடுத்து உள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் கலந்து கொண்டார். இவர் நட்சத்திர தம்பதிகளான மஞ்சுளா – விஜயகுமார் ஆகியோரின் மகள் ஆவார். தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் வனிதா சிக்கி வந்ததால் அவரை அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒதுக்கி வைத்து விட்டனர். இதன் காரணமாக வனிதாவும் அவரது குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியே தான் இருப்பார்.
நாகசைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு வெளியே வந்த சமந்தா – வைரல் புகைப்படங்கள்!
இருந்தாலும், அவ்வப்போது சில நேரங்களில் தனது சகோதரன் மற்றும் சகோதிரிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து ஆகியவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் வாயிலாக தெரிவித்து வருகிறார். இப்படியாக இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் விஜயகுமாரின் சகோதரர் மகளான அனிதா என்பவர் மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்து விட்டாராம். அவர் வனிதாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பாராம். இந்த மாதம் அவரது வீட்டில் வந்து தங்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தாராம்.
ஆனால், அதற்கு முன்னபாகவே எதிர்பாராத விதமாக மரணம் அடைந்து விட்டார். அவர் மரணம் அடைந்து விட்டதே 10 நாட்களுக்கு பிறகு தான் வனிதாவுக்கு தெரிந்துள்ளது. இப்படியான சூழ்நிலையில் தான் வனிதாவின் தங்கைகள் நவராத்திரியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். தற்போது தனது சகோதிரிகளை வறுத்தெடுத்து ஒரு பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதில், ’20 வயது குழந்தை மரணம் அடைந்ததை அடுத்து நான் நவராத்திரியை இந்த முறை கொண்டாடவில்லை. குறிப்பாக எனது சகோதிரிகளை போல ஒருவர் இறந்து கொஞ்ச நாட்களிலேயே நகைகள் மற்றும் புடவைகளை அணிந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடுவதோ அல்லது நவராத்திரி கொண்டாடுவது என்னால் முடியவில்லை. இது மிகவும் மனிதாபமற்ற செயல். இந்த போலியான குடும்பம் என்னுடன் இருக்கவில்லை என்று நினைக்கையில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.