தமிழக தபால் துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசுத்துறை நிறுவனமான தபால்துறை வட்டத்தில் காலியாக இருக்கும் சுமார் 500 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்புகளை நடத்த புதிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
காலிப்பணியிடங்கள்
சமீபகாலமாக தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அரசு சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து துறை உள்ளிட்ட சில முக்கியத் துறைகளில் புதிய பணியிடங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தபால் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 500 பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி & முகவரியினை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பவர்கள் https://tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் 20ம் தேதிக்குள் கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது தபால் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள், வயது வரம்பு ஆகிய விவரங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்,
போஸ்ட்மேன் பிரிவு:
- சென்னை மண்டலத்தில் 234 இடங்கள்
- மத்திய மண்டலத்தில் 58 இடங்கள்
- தெற்கு மண்டலத்தில் 117 இடங்கள்
- மேற்கு மண்டலத்தில் 79 இடங்கள்
- மெயில் கார்டு பிரிவில் 13 இடங்கள் என மொத்தம் 501 இடங்கள் காலியாக இருக்கின்றன.
கல்வித்தகுதி:
- இந்த பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி ஒரு முக்கிய கல்வித்தகுதியாகும்.
- தமிழ் பாடமும் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
- ஜனவரி 2021 என்ற அடிப்படையில், பொதுப்பிரிவினருக்கு – 50
- OBCக்கு – 56 வயது
- SC மற்றும் ST பிரிவினருக்கு – 55 வயது
தேர்வு முறை:
தபால்துறை பணிக்காக எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய 2 தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
தேர்வு மையம்:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.