குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நடிகை சமந்தா விவாகரத்து செய்தது ஏன்? ரசிகர்களின் குமுறல்!

0
குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நடிகை சமந்தா விவாகரத்து செய்தது ஏன்? ரசிகர்களின் குமுறல்!
குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நடிகை சமந்தா விவாகரத்து செய்தது ஏன்? ரசிகர்களின் குமுறல்!
குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட நடிகை சமந்தா விவாகரத்து செய்தது ஏன்? ரசிகர்களின் குமுறல்!

தமிழ் திரைப்பட நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதற்கு முன்பாக தனது குழந்தை குறித்து கூறிய பதிவு ஒன்று தற்போது மீண்டுமாக பேசும் பொருளாக மாற அது நடிகை சமந்தாவின் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து வருகிறது.

நடிகை விவாகரத்து

சமீபத்தில் தென் இந்திய திரையுலகை சேர்ந்த நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தாவின் காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களிடையே ஒரு பெரிய பிரளயத்தையே உருவாக்கி இருந்தது. நட்சத்திர காதல் ஜோடிகளில் சிறந்த தம்பதிகளாக வலம் வந்த நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 4 ஆண்டுகால திருமண வாழ்க்கையை தற்போது முறித்து கொண்டனர்.

சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய பாரதி, கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் குஷி!

இந்த தகவல் நடிகை சமந்தாவின் ரசிகர்களால் இன்று வரையும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்த இந்த தம்பதிகளுக்குள் ஏன் இந்த திடீர் பிளவு ஏற்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து நடிகை சமந்தா கூறிய பழைய பதிவு ஒன்று அவரது ரசிகர்களை மீண்டுமாக வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அதாவது தனக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், குழந்தை பிறந்தால் அது மட்டும் தான் தன்னுடைய உலகமாக இருக்கும் என்றும் சமந்தா ஏற்கனவே கூறி இருக்கிறார். அதே போல சிறிய வயதில் தான் பட்ட கஷ்டங்களை தனது குழந்தை படக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்திருக்கிறார். அதே போல குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தேதி குறித்து வைத்திருப்பதாகவும், நாகசைதன்யா ஆசைப்பட்டதை போல அந்த தேதியில் தான் குழந்தை பிறக்கும் என்றும் நடிகை சமந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ட்விட்டரை ஆளப்போகும் இந்தியன் – Today Current Affairs 30 November 2021!

நடிகை சமந்தாவின் இந்த பேட்டியானது தற்போது சமூக வலைதளங்களில் மீண்டுமாக பகிரப்பட, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட இவர்கள் இருவரும் எதற்காக விவாகரத்து செய்தார்கள், அதற்கு என்ன அவசியம் வந்தது என வருத்தப்படும் ரசிகர்கள், நாகசைதன்யா மற்றும் சமந்தா விவகாரம் குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என நடிகர் நாகர்ஜுனாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!