பாரதி கண்ணம்மா சீரியலில் ரீ- என்ட்ரி கொடுக்கும் ரோஷினி – ரசிகர்கள் அதிர்ச்சி!
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து நம் அனைவர் மனதிலும் கண்ணம்மாவாகவே இடம் பெற்றிருக்கும் ரோஷினி மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க இருப்பது போன்று இன்ஸ்டாவில் பதிவிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் சின்னத்திரையின் நம்பர் 1 சீரியலாக ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். இந்நிலையில், மக்கள் எதிர்பாராத விதமாக கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிபிரியன் தான் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர். கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய ரோஷினி இல்லாமல் கதையை எப்படி பார்ப்பது என்று கூறி வந்தனர்.
கண்ணம்மா ரோஷினியை மிஸ் செய்யும் பாரதி? ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் அருண் பிரசாத் அளித்த பதில்!
ஆனால் ரோஷினி தான் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தததாகவும், இதுவரை மக்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றும், இனியும் இதேபோல் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரோஷினி கண்ணம்மா கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோவை நேற்று பதிவிட்டிருந்தார். இதனால் கண்ணம்மாவாக மீண்டும் ரோஷினி சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சமையல் போட்டியில் தடுமாறும் சரவணன், சந்தியாவின் மாஸ்டர் பிளான் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
அதன் பின்னர், தான் நேற்று அருண் மற்றும் ரோஷினி இருவருக்கும் பிறந்த நாள் என்றும் அதற்காக தான் ஃபரீனா ரோஷிணியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார். ரோஷினி தனக்கு சீரியலில் தான் எதிரி என்றும், சீரியலை விட்டு வெளியே வந்தால் தனக்கு நல்ல தோழி என்றும் முன்னரே ஃபரீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த புகைப்படத்தில் மிஸ் யூ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த புகைப்படம் பிறந்தநாளிற்காக பதிவிட்டது என்று ரசிகர்கள் அறிந்து கொண்டனர். ரோஷினிக்கு பதிலாக தற்போது வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.