சமையல் போட்டியில் தடுமாறும் சரவணன், சந்தியாவின் மாஸ்டர் பிளான் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சல்மா ட்ரெஸ் மீது சூப் கொட்டியதால் சந்தியா வருத்தத்துடன் இருக்கிறார். பின் சந்தியா குடும்பத்தினர் அனைவரையும் வர சொல்லலாமா என போட்டி நடத்துபவரிடம் கேட்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சல்மா ட்ரெஸ் மீது சூப் கொட்டியதை நினைத்து சந்தியா வருத்தப்படுகிறார். நான் உண்மையை சொன்னதால் தான் அவங்க வருத்தப்பட்டாங்க என சொல்ல, தப்பு எங்க மீது தான் அவளுடைய ட்ரெஸ் நன்றாக இல்லை என நாங்க சொல்லிருந்தா அது உண்மையாகி இருக்கும். இப்போ உண்மையை சொன்ன சந்தியா குற்றவாளி ஆயிட்டாங்க என சொல்கிறார். நான் மீண்டும் சாரி கேட்கிறேன் என சொல்ல, சந்தியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். சரவணன் இருக்கும் இடத்தை அப்பாவிற்கு போட்டோ எடுத்து அனுப்புகிறார். சந்தியா அதை பார்த்து பாவம் குடும்பத்தை இவர் ரொம்ப மிஸ் செய்கிறார்.
அமிர்தா குழந்தையின் உயிரை காப்பாற்றி தன் காதலை சொன்ன எழில், வீடு திரும்பிய கோபி – இன்றைய எபிசோட்!
என நினைத்து போட்டி நடத்துவோருடன் சந்தியா பேசுகிறார். எங்க குடும்பம் அப்போது வர முடியவில்லை அதனால் அவங்க ரூம் பிரீயாக தான் இருக்கிறது அதனால் அவர்களை வர சொல்லலாம என கேட்கிறார். போட்டியாளருடன் 3 பேர் தான் தங்க முடியும் அதனால் நீ சொல்வது முடியாது என சொல்ல ஏற்கனவே சரவணனிற்கு எல்லா சலுகையும் கொடுப்பதாக நினைக்கிறார்கள். நான் கேட்டு சொல்கிறேன் என சொல்கின்றனர். அனைவரும் வந்தால் சரவணன் உற்சாகமாக கலந்து கொள்வார் என சந்தியா நினைக்கிறார். பின் செந்தில் பணத்தை எண்ணிக் கொண்டிருக்க அர்ச்சனா எதற்கு பணம் என கேட்கிறார். அப்போது செந்தில் பேங்க் சென்று பணத்தை போட போகிறேன் என சொல்கிறார்.
அர்ச்சனா அம்மா ஸ்வீட் கடையை பார்த்துக் கொள்ள சொன்னார் அதான் கேட்டேன் என சொல்ல நீ அவ்வளவு நல்லவள் இல்லையே என கேட்க அர்ச்சனா அழுது நடித்து செந்திலை ஏமாற்றுகிறார். பின் சந்தியா சரவணன் சமையல் போட்டியில் இருக்க அனைவரையும் மேடை ஏறி பேச அழைக்கின்றனர். ஒரு ஒருவராக வந்து சமையல் போட்டியில் கலந்து கொள்ள வந்ததற்கான காரணத்தை சொல்கிறார். அப்போது சரவணன் வந்து பேச தொடங்குகிறார். ஆனால் அவருக்கு பதட்டத்தில் என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறது. சந்தியா பேசுங்க என சொல்ல சரவணன் சரி என சொல்கிறார். எல்லாரும் ஏன் ஒன்னும் பேசாமல் இருக்காரு என கேட்க, என் பேரு சரவணன் என சொல்லி பதட்டமாக இருக்கிறார்.
நீங்க பேசவே இப்படி கஷ்டப்படுறீங்க அதனால் நீங்க இறுதி சுற்று வரை போவீங்களா என சந்தேகமாக இருக்கிறது. நீங்க சமைப்பீங்களா என கேட்கிறார். சமைப்பேன் என சரவணன் சொல்ல, இப்போது எனக்கு சமைத்து காட்டுங்க என சொல்கிறார். சரவணன் சமைக்க அனைவரும் சாப்பிட்டு பார்த்து நன்றாக இருக்கிறது என சொல்கிறார். பின் சந்தியா வந்து அவர் பேச தடுமாறுகிறார். ஆனால் அவர் சமைத்ததை பார்த்து ரொம்ப பெருமையாக இருக்கிறது என சொல்கிறார். சந்தியா நடுவரை அழைத்து நன்றி சொல்ல, நானும் இதே நிலைமையில் இருந்து தான் வந்திருக்கேன் எனக்கு எல்லாம் தெரியும் என சொல்கிறார். பின் குடும்பத்தை வர சொல்வது பற்றி சொல்லிருந்தேன் என கேட்க, அவங்களை நீங்க வர சொல்லலாம் என சொல்கிறார். அதை கேட்டு சந்தியா சந்தோசப்படுகிறார்.