விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கும் நடிகை ரட்சிதா – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் குடும்பக் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிதாக கதாபாத்திரம் ஒன்று வர இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. சென்ற வார எபிசோடில் ஐஸ்வர்யா மீனாவை சேர்த்து வைக்க தனமும் முல்லையும் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்கின்றனர். அதில் இருவருக்கும் ஒரே மாதிரி ட்ரெஸ் எடுத்து கொடுத்து அவர்களை சப்ரைஸ் செய்கின்றனர். ஆனால் ஜீவா பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததால் மீனா கோவமாக அவரது அப்பா உடன் வீட்டிற்கு சென்றுவிடுகிறார். இந்நிலையில் தனம் மீனா கடைசி வரை வராததை நினைத்து வருத்தப்படுகிறார்.
செழியனை அடிக்கும் எழில், சுக்குநூறாக உடையும் குடும்பம் – பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம்!
ஜீவா மீனா வீட்டிற்கு சென்று அவரை படம் பார்க்க அழைத்து சென்று சப்ரைஸ் செய்கிறார். இந்நிலையில் அடுத்து கதை எப்படி செல்லும் என்ற எதிர்பார்ப்புடன் சீரியல் இருக்கிறது. கதையில் எந்த ட்விஸ்ட் இல்லாமல் இருப்பதால் மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்க புதிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த கதாபாத்திரத்திற்கு இந்திரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பிரபலமானா நடிகை ரட்சிதா மகா லட்சுமி நடிக்க இருக்கிறார்.
அவர் முன்னதாக “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருடைய கதாபாத்திரம் எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் கதை தற்போது குடும்பத்தை சுற்றியே காட்டப்படுவதால் வக்கீல் கதாபாத்திரத்தால் சீரியலில் புதிய திருப்பம் வர போகிறது. முன்னணி நடிகையின் என்ட்ரி குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.