மீண்டும் சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!
பழம்பெரும் நடிகையான நடிகை கே.ஆர் விஜயா தற்போது புதிதாக ஒரு ஒரு சின்னத்திரை சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் இவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
நடிகை கே.ஆர் விஜயா:
நடிகை கே.ஆர் விஜயா தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிப் படங்கள் உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். புன்னகை அரசி என அழைக்கப்படும் நடிகை இவர். ஆரம்ப காலத்தில் நாடகக் குழுவிலும் சில மேடை நாடங்களில் நடித்து வந்தார். இவர் 1960 களில் நடிக்கத் தொடங்கி சுமார் 40 ஆண்டுகளுக்கு அதிகமாக நடித்து வருகிறார். இவர் நடித்த முதற்படமான கற்பகம் 1963 இல் வெளிவந்தது.
‘மன்னிப்பு கேட்க சொல்லி இருக்கலாம்’ – நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய நீதிமன்றம்!
எம்.ஜி.ஆா், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ.வி.எம். ராஜன், ஜெய்சங்கா், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகா்களுடன் சோ்ந்து நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். முதன்முதலாக பைரவி என்ற ஆன்மீக தொடரில் சன் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு நடித்தார். அது வார இறுதியில் மட்டும் ஒளிபரப்பபடும் திகில் கலந்த தொடர் என்பதால் மிகவும் வரவேற்ப்பை பெற்றது.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி விலகல்? இது தான் காரணமா? வெளியான உண்மை தகவல்!
அதன் பிறகு தற்போது விஷாலின் சக்ரா படத்திலும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ளார். இந்த தொடரில் அடிக்கடி பிரபல சினிமா பிரபலங்களை வைத்து காட்சிகள் வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை கே.ஆர். விஜயா பல ஆண்டுகள் கழித்து திரையில் தோன்ற இருப்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.