‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி விலகல்? இது தான் காரணமா? வெளியான உண்மை தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உறுதியானது என சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.
நடிகை ரோஷினி
தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் ஒவ்வொரு வாரமும் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து எப்போதும் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்று வரும் ஒரு சீரியல் என்றால் அது விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ தான். மிகவும் புதுமையான கதைக்களத்துடன் விஜய் டிவியில் இடம்பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு ஆரம்பம் முதலே ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள் பலரும் சின்னத்திரைக்கு புதிய முகங்கள் தான்.
ராதிகாவுடன் கோபி நெருக்கமாக இருப்பதை பார்த்து ஷாக் ஆன அப்பா – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
அதாவது ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் பாரதி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், அஞ்சலியாக வரும் ஸ்வீட்டி, அகிலாக வந்த அகிலன் மற்றும் சுகேஷ் ஆகியோர் சீரியலுக்கு புதிய முகங்கள் தான். இருந்தாலும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிய ஆர்வத்தினால் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வந்த நடிகர் அகிலன் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதால் அந்த சீரியலை விட்டு சமீபத்தில் விலகினார். தற்போது மீண்டுமாக ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும் வலைதளங்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு நடிகை ரோஷினி இதுவரை எவ்வித பதிலும் கொடுக்கவில்லை.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து கண்ணம்மா விலகுவது உண்மையா? ரசிகர்கள் அதிர்ச்சி!
தவிர ரோஷினியின் நெருங்கிய வட்டாரங்கள் இது தொடர்பாக கூறுகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினி விலக இருக்கும் தகவலை உறுதிபடுத்தியுள்ளனர். அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், அதனால் அவர் சீரியலை விட்டு விலக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.