மீண்டும் சின்னத்திரையில் நடிகை குஷ்பூ – கலர்ஸ் தமிழில் புதிய சீரியல்! ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக குஷ்பூ, தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்த சீரியல் தொடக்க பூஜை முடிவடைந்துள்ள நிலையில் அந்த சீரியலுக்கு மக்கள் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ:
90’ஸ் காலத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானவர் நடிகை குஷ்பூ. அவரின் குண்டான தோற்றமே அவருடைய வெற்றிக்கு மூலக் காரணமாக இருந்தது. குஷ்பூ இட்லி என பெயர் வைக்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார். அதன் பின் அவர் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார். சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் அவர் நடித்து இருந்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், அரசியல்வாதி, ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவர் என ஆல் ரௌண்டராக இருக்கிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
இந்நிலையில் தன்னுடைய கணவர் சுந்தர் சியுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். அரண்மனை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இவர்களது அவ்னி கிரியேஷன்ஸ் தயாரித்தது தான். இவரது தயாரிப்பில் உருவான படங்கள் பல மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. மேலும் அவர் அந்த படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ புதிய சீரியல் ஒன்றை இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்.16 முதல் மீண்டும் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இந்த சீரியலின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் கதையை அவரே எழுதி இருக்கிறாராம். கலர்ஸ் டிவி தமிழில் இந்த சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீரியலுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் தற்போது கலர்ஸ் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.