மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த 18 மாத அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்தை ஒரே தவணையில் செட்டில்மென்ட் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு:
கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) தொகை குறித்து மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே நேரத்தில் அரசு ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்தை வரவு வைக்கலாம் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இது தொடர்பான ஊடக அறிக்கையின்படி, JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, தனது கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வைத்துள்ளதாகவும், ஆனால் இரு தரப்பினரும் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
பிப்.16 முதல் மீண்டும் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
இதற்கிடையில் 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒரு தவணையில் கொடுத்து தீர்க்க வேண்டும் என தொழிலாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இப்போது மிஸ்ராவின் கூற்றுப்படி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மற்றும் நிதி அமைச்சகம், செலவினத்துறை அதிகாரிகளுடன் JCM நடத்தும் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின் போது 18 மாத DA நிலுவைத் தொகையும் ஒரு முறையில் கொடுத்து தீர்க்கும் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 17 முதல் பள்ளிகள், அங்கன்வாடிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!
இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி அக்டோபர் 2021 முதல் 17% இல் இருந்து 31% ஆக உயர்த்தப்பட்டது. இருப்பினும் இந்த நிலுவைத் தொகை ஊழியர்களின் கணக்கில் இன்னும் டெபாசிட் செய்யப்படவில்லை. இப்போது DA உயர்வு கிடைத்தால் லெவல்-1 ஊழியர்களின் நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று முன்பு குறிப்பிட்டிருந்தது. அதேசமயம், லெவல்-13 ஊழியருக்கு ரூ.1,44,200 முதல் ரூ.12,18,200 ஆக DA தொகை செலுத்தப்படும் என்று அறிக்கைகள் மேற்கோள் காட்டுகின்றன.