சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய் மீதான வழக்கு -அபராதத்துடன் தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல்!

0
சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய் மீதான வழக்கு -அபராதத்துடன் தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல்!
சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய் மீதான வழக்கு -அபராதத்துடன் தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல்!
சொகுசு கார் தொடர்பாக நடிகர் விஜய் மீதான வழக்கு -அபராதத்துடன் தள்ளுபடி செய்ய மனுத்தாக்கல்!

நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த கார் ஒன்றுக்கு வரி செலுத்த தாமதமானதால் வணிக வரித்துறை அபராதமாக ஒரு தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அதற்கான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசின் பதில் மனு:

நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் ஒன்றை இறக்குமதி செய்தார். அதற்கான நுழைவு வரியை கட்ட தவறிய அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கையாக விஜய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

மாநில அரசுக்கு நுழைவு வரியை வசூல் செய்ய முழு உரிமை உள்ளது. அதனால் உத்தரவிட்ட படியே வரியை செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் விஜய் தரப்பிலிருந்து 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் செலுத்தப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று வணிக வரித்துறையில் இருந்து நடிகர் விஜய் நுழைவு வரி கட்டாமல் இருந்த இடைப்பட்ட காலத்தில் உள்ள வரியையும் சேர்த்து கட்ட வேண்டும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் வழக்கு வந்த நிலையில் வணிக வரித்துறை சார்பில் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆர்கிடெக்சர் படிப்புக்கான ‘நாட்டா’ நுழைவுத்தேர்வு 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதாவது குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தாததால் 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாயும் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், நடிகர் விஜய் தரப்பில் உள்ள வழக்கறிஞர் வரி செலுத்த தவறியதற்கு மாத அபராதமாக 2% மட்டுமே விதிக்க வேண்டும். ஆனால் வணிக வரித்துறை விஜய்க்கு 400% அபராதம் விதிப்பது என்ன நியாயம் என்று தொடர்ந்து வாதத்தை முன் வைத்து வந்தார். அதனால் நீதிபதி இதை குறித்த மனுக்களை தீர விசாரித்து அதன் பின்னர் இவவழக்கு தொடரும் என தெரிவித்து ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!