ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் கார்த்தி – ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றான செம்பருத்தியில், தற்போது மீண்டும் பழைய ஆதியை பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
செம்பருத்தி சீரியல்:
ஜீ தமிழ் தொலைக்காட்சி மக்களிடையே மிகவும் பிரபலமானதற்கு செம்பருத்தி சீரியலும் ஒரு முக்கிய காரணமாகும். அதற்கு கதைக்களம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் நடித்து வரும் நடிகர்களும் மற்றொரு காரணமாக இருக்கின்றனர். முதலில் ஆதியாக நடித்த கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதியாக நடித்த ஷபானா ஜோடிக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து கார்த்திக் விலகி விட்டார். அதன்பின் தான் சீரியல் TRP இறங்க தொடங்கியது. மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ராமன் நடிக்கிறார்.
கர்பத்துடன் நடனம் ஆடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!
அவருக்கு சின்னத்திரையில் இந்த சீரியல் தான் அறிமுகம் கொடுத்துள்ளது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலில் தொடர்ந்து கதாபாத்திரங்கள் மாற்றம் செய்ததே முக்கிய வீழ்ச்சியாக இருந்தது. 3 ஆண்டுகள் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும் இன்னும் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். மேலும் கதாநாயகியாக நடிக்கும் ஷபானா, முன்னணி நடிகை பிரியா ராமன் ஆகியோர் நடிப்பதால் இந்த சீரியல் இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியல் தற்போது முடிவிற்கு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
ஆனால் தற்போது தான் கதையில் விறுவிறுப்பு கூடியுள்ளது. மேலும் பலர் பழைய ஆதி, பார்வதியை பார்க்காமல் ரசிகர்கள் தவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் பழைய ஆதி வர வாய்ப்பு வந்துள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை முதல் (அக்டோபர் 4) செம்பருத்தி சீரியல் முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த எபிசோட் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.