கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்த நடிகர் கமல் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
தமிழில் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன்:
தமிழில் முன்னணி நடிகரான கமல்ஹாசன் அவர்கள் தமிழில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கி தலைவராக இருக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். அண்மையில் அமெரிக்கா சென்று வந்தார்.
TCS, Infosys, Wipro மற்றும் பிற ஐடி நிறுவனங்களில் 20% ஊழியர்கள் ராஜினாமா – ஆய்வு அறிக்கை வெளியீடு!
இந்த நிலையில் இவருக்கு திடீரென சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. அதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா தொற்று முழுமையாக குறையவில்லை அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்து வருகிறார்.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 15 நாட்கள் தடை! தேவஸ்தானம் அறிவிப்பு!
அதனால் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுப்பட்டது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சில நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 4ம் தேதி முதல் வழக்கமான பணிகளை தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.