தமிழகத்தில் மின்தடை குறித்த புகார்களுக்கு நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் பொதுமுடக்கம் காரணமாக மக்கள் வீடுகளிலேயே இருப்பதால் மின்துறை பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில இடங்களில் மின் தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மின்தடை ஏற்படும் இடங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
மின்தடை நடவடிக்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 14 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன் 9, 11 & 14ம் தேதிகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தடையில்லாமல் மின்சாரம் கிடைக்க பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மின்சார பழுது ஏற்படுகிறது. இதனால் மின்சார தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மின்சார தடை குறித்து புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் 6 மாத காலத்திற்கு எந்த வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் மிகவும் அவசியமான தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதனால் மின்சார தடை ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.