இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 18,936 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இறப்பு விகிதம், சிகிக்சை பெறுவோர் விகிதம் குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்று வேகமெடுத்து பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. தற்போது வரை கொரோனா பாதிப்புகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்த நிலைக்கு உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவு வைரஸ் தாக்கம் குறைந்தது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் தலை தூக்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 18,936 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,59,239 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 35 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,25,305 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் மட்டும் 14,650 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,21,977 ஆகவும் விகிதம் 8.52% ஆக உயர்ந்துள்ளது.
இந்திய மசாலா வாரியத்தில் ரூ.25,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,19,457 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 1,98,33,18,772 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அதில் நேற்று ஒரே நாளில் 11,44,489 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.