இந்திய மசாலா வாரியத்தில் ரூ.25,000 ஊதியத்தில் பணி வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
இந்திய மசாலா வாரியத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Clerical Assistant பணிக்கு என 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இப்பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 08.07.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம்.
இந்திய மசாலா வாரிய வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள Clerical Assistant பணிக்கு என மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு அலுவலகங்கள் அல்லது தன்னாட்சி அமைப்புகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் சரக்கு வாரியங்கள் துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Clerical Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் தோறும் ரூ.25,000/- சம்பளமாக கொடுக்கப்படும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்திய மசாலா வாரிய விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.07.2022 ம் தேதிக்குள் அனுப்பியவர்கள் மட்டும், தற்போது பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 08.07.2022 ம் தேதிக்குள் வரும் படி தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்றே விண்ணப்பிக்கவும்.