கல்வி, வேலைவாய்ப்புகளில் 50% மேல் இடஒதுக்கீடு – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!!
அரசு வேலைவாய்ப்பு மற்றும் மாணவர் சேர்க்கையில் 50% இடஒதுக்கீடு பின்பற்றலாமா என்பது குறித்து மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் நோட்டீஸ்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் 52% இடஒதுக்கீடு முறை அமலில் உள்ள நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய பாஜக அரசு மசோதா கொண்டுவந்தது. இந்த அறிவிப்பு உச்சநீதிமன்ற 50% இடஒதுக்கீடு முறைக்கு எதிரானது என வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே தமிழகத்தில் வழங்கப்பட்ட 69% சதவிகித இடஒதுக்கீடு குறித்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறியது. மேலும் அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகள் மார்ச் மாதம் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் – பள்ளிகளுக்கு உத்தரவு!!
ஏற்கனவே தமிழகத்தில் அரசு பணிகள் மற்றும் மாணவர் சேர்க்கை வழங்க தமிழக அரசு வழங்கும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சலுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு இந்த வழக்கில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்