தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் – பள்ளிகளுக்கு உத்தரவு!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதால் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்த ஆய்வகங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
செய்முறை தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 11 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்த கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில் மாணவர்கள் பாடத்திட்டத்தை விரைவாக முடிக்க ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பள்ளிகளில் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ள ஆய்வகங்களை தயார் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான சிறப்பு லோன் திட்டம் – எஸ்பிஐ வங்கி வெளியீடு!!
இந்த அறிவிப்பினை தொடர்ந்து பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகம், வேதியியல் ஆய்வகம், இயற்பியல் ஆய்வகம் போன்றவற்றை தூய்மைப்படுத்தி அவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா என சோதனை செய்து அதனை தயார்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்