2026க்குள் சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு – நிர்வாகம் உறுதி!

0
2026க்குள் சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு - நிர்வாகம் உறுதி!
2026க்குள் சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு - நிர்வாகம் உறுதி!
2026க்குள் சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு – நிர்வாகம் உறுதி!

தமிழகத்தில் முதன்முதலில் மெட்ரோ ரயில் சேவை சென்னைக்கு தான் வந்தது. முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து அவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய வழித்தடம்:

மத்திய அரசு தமிழக தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை சில ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கியது. திட்டம் அறிவிக்கப்பட்டு, பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மெட்ரோ திட்டத்தை விரிவு படுத்தும் விதமாக மதுரை, கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் நடந்து முடிந்து, ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து வருகிறது.

நவம்பர் ரொம்ப நல்ல மாசம் போலயே.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை?

Exams Daily Mobile App Download

இந்நிலையில், சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் 3 வழித்தடங்களுக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. 11 ரயில் நிலையங்கள் அமைய உள்ள இந்த வழித்தடத்தில் விரைவில் சேவையை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் கூட்டத்தில் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ தொடரான பணிகள் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2026ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறியுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!