மத்திய அரசில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – அமைச்சர் தகவல்!!
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசின் 78 அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி துவக்கம் – டெல்லி முதல்வர் விளக்கம்!!
Follow our Instagram for more Latest Updates
இதனை தொடர்ந்து, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக ரோஸ்கர் மேளா மூலம் வேலைவாய்ப்பற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமன ஆணைகளை பெற்று வருகின்றனர்.
மேலும் ‘ரோஸ்கர் மேளா’ மூலமாக 1 வருட காலத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அரசின் 78 அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 9.79 லட்சம் காலியிடங்கள் வரை உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் ரயில்வே துறையில் 2.93 லட்சம் பணியிடங்களும், பாதுகாப்புத் துறையில் 2.64 லட்சம் பணியிடங்களும், உள்துறை அமைச்சகங்கத்தில் 1.43 லட்சம் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.