சுமார் 300 பள்ளிகள் மூடல் – அரசு அதிரடி நடவடிக்கை! இதற்காக தான்?
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் இணைந்த 300 பள்ளிகளை மூடும்படிக்கு ஜம்மு காஷ்மீரின் பள்ளிக் கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் இப்பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
ஜம்மு காஷ்மீரில் தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி குழுவுடன் இணைந்த ஃபலாஹ்-இ-ஆம் அறக்கட்டளை (FAT) நடத்தும் தனியார் பள்ளிகள் மீது யூனியன் பிரதேச நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். அதாவது, கடந்த ஜூன் 13ம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்விச்செயலர் கிட்டத்தட்ட 300 பள்ளிகளுக்கான கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி அடுத்த 15 நாட்களுக்குள் அந்த நிறுவனங்களுக்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Exams Daily Mobile App Download
மேலும் இந்த 300 பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது ஜம்மு காஷ்மீரின் ஜமாத்-இ-இஸ்லாமி (JeI) என்பது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்ட விதிகளின் கீழ் உள்துறை அமைச்சகத்தால் தடைசெய்யப்பட்ட ஒரு தீவிரமான அமைப்பாகும். இந்த அமைப்புடன் இணைக்கப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நிலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சட்ட விரோத செயல்கள், மோசடிகள் ஆகியவற்றின் காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமியுடன் இணைந்த 300 பள்ளிகளை மூடும்படிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ‘இது’ இல்லாமலும் சேர்க்கை, அரசு அதிரடி!
இப்போது பள்ளிக் கல்வித்துறை செயலர் பி.கே.சிங் உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட பள்ளிகளில் பயின்ற மாணவர்களை நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் சேர்க்குமாறு தலைமைக் கல்வி அதிகாரிகள், முதல்வர்கள் மற்றும் மண்டலக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை செய்யப்பட்ட FAT நிறுவனங்களில் புதிதாக மாணவர் சேர்க்கை செய்யப்பட மாட்டாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் 300 பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.