அரசு பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ‘இது’ இல்லாமலும் சேர்க்கை, அரசு அதிரடி!
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அத்துடன் தனியார் பள்ளிகளில் படித்து மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் 8ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கை:
புதுவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திட்டமிட்டபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை முடிவடைந்து வருகிற ஜூன் 23ம் தேதி முதல் 2022-2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் புதுவையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அத்துடன் ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு செல்லும் போது மாற்று சான்றிதழ் கட்டாயமாகும். ஆனால் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது மாற்றுச் சான்றிதழ் வைத்திருக்கவில்லையென்றாலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி வரவில்லையா? கவலை வேண்டாம்! புகார் அளிக்க எண்கள்!
மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை என மாணவர்களின் வயதை கணக்கிட்டு மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அதற்குரிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் கூட மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், ஆங்கில வழிக்கல்வி உள்ளிட்டவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் குறிப்பாக கிராமப்புறங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.