‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை நான் தான்? நடிகை அபிநயா விளக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை நான் தான்? நடிகை அபிநயா விளக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை நான் தான்? நடிகை அபிநயா விளக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை நான் தான்? நடிகை அபிநயா விளக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை அபிநயா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு குழப்பங்களுக்கு காரணமாக அமைந்திருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்து அபிநயா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அவ்வப்போது நிகழும் பல்வேறு ஏற்ற, தாழ்வுகள், விமர்சனங்கள், கருத்துக்கள், ரீபிளேஸ்மென்ட் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் பேராதரவுடன் சுமார் 4 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் சொல்லக்கூடிய அளவுக்கு ஃபேன் பேஸ் இருக்கிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் மீண்டும் வந்த சிபி & அபிநய் – ரசிகர்கள் உற்சாகம்!

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதிர், முல்லை ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அதாவது இத்தொடரில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா மற்றும் நடிகர் குமரனுக்கு மக்கள் தங்களது அன்பையும், ஆதரவையும் அள்ளித்தந்தனர். இப்படி இருக்க விஜே சித்ராவின் திடீர் மரணத்தினால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லையாக நடிகை காவ்யா அறிமுகம் செய்யப்பட்டார்.

நடிகை காவ்யா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லையாக என்ட்ரி கொடுத்து ஒரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மீண்டுமாக முல்லை ரோல் மாற்றப்பட இருப்பதாகவும் காவ்யாவுக்கு பதிலாக நடிகை அபிநயா என்பவர் முல்லை ரோலில் நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியது. அதாவது, முல்லையின் தோற்றத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் இருந்து நடிகை அபிநயா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதனால் அபிநயா தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக தொடர இருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து ஒரு லைவ் சேட் மூலம் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை அபிநயா. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடிப்பதாக சொல்லி எனக்கு நிறைய கமெண்டுகள் வருகிறது. சமூக வலைதளங்களில் சொல்லப்படும் இந்த கருத்துக்களால் அனைவரும் இது பற்றி என்னிடம் கேட்க துவங்கி உள்ளனர். நான் எந்தவொரு இடத்திலும் முல்லையாக நடிக்கிறேன் என்று சொல்லவில்லை.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 படப்பிடிப்பு கொரோனாவால் திடீர் நிறுத்தம்? வெளியான ஷாக் தகவல்!

ஆனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நான் நடித்திருப்பது உண்மை. அது எந்த ரோல் என்று என்னால் இப்போதைக்கு சொல்ல முடியாது. எனக்கான ஷூட்டிங் தற்போது முடிவு பெற்றுள்ளது. நான் நடித்துள்ள காட்சிகள் அடுத்து வரும் எபிசோடுகளில் வெளியாகும். பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள். விஜே சித்ராவின் ரோலில் முல்லையாக நீங்கள் நடிக்க வேண்டாம் என்று ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்தால் எல்லாரும் சித்ரா ஆகி விடமாட்டார்கள். நானும் சித்ராவின் ரசிகை தான். அதற்காக நான் அவரது கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சொல்லவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!