TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
2022 ஆம் ஆண்டு அரசு வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகளில் இனி தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (TNPSC) தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
TNPSC தலைவர் அறிவிப்பு:
கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு அரசு போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு TNPSC குரூப் 2 பிப்ரவரி மாதத்திலும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதத்திலும் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதால் தேர்வெழுதும் தேர்வாளர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
நேற்று தஞ்சாவூரில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 79 மையங்களில் 32,262 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தனியார் பள்ளிகளில் நடைபெறும் இத்தேர்வை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த TNPSC தலைவர் கா.பாலச்சந்திரன் அடுத்து நடக்கும், TNPSC குரூப் தேர்வுகள் அனைத்திலும் தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் தற்போது ஆங்கில மொழிப்பாடம் TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறது என்று கூறினார்.
தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களையும் கருத்தில் கொண்டு ஆங்கில மொழிப் பாடத்தை நீக்கி தமிழ் மொழித் தேர்வை தகுதித் தேர்வாக மாற்றி அமைக்க TNPSC தேர்வாணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். இனிமேல் குரூப் 1, 2, 3 ஆகிய தேர்வுகளில் தமிழ் மொழித்தகுதி தேர்வில் 40 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்தால் மட்டுமே மற்ற கேள்விகளுக்கான பதில்கள் திருத்தப்படும் என்றும் குரூப் 4 தேர்விலும் 40க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் தான் அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும் என்று கூறினார்.