தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளது. அதாவது சராசரி அளவை விட 3 லட்சம் லிட்டர் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆவின் பால்
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. கோடை வெப்பம் அதிகரிப்பால் ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி மூன்று லட்சம் லிட்டர் வரை சரிந்து இருப்பதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கால்நடைகளுக்கு வெப்ப அழுத்தம் ஏற்பட்டு உள்நாட்டு கால்நடை மற்றும் கலப்பின, அயல் நாட்டு கலப்பின கறவை மாடுகளின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரி 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலைமை மோசமாகி பால்கோவா ஐஸ்கிரீம் பால் சார்ந்த இனிப்புகள் போன்ற பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.