தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிகழ்கிறது .இதனால் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் 13, 14 தேதிகள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 15ஆம் தேதி 10 தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
NIT திருச்சி DEO வேலைவாய்ப்பு 2024 – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இன்றைய நிலவரப்படி தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஐந்து டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாகவும், 12 13 14 தேதிகளில் 5° பாரன்ஹீட் வரை படிப்படியாகவும் வெப்பநிலை குறைய கூடும். சென்னையை பொருத்தவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி வெப்பநிலை இருக்கும் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.