தமிழக அரசின் ரூ.2500 பொங்கல் பரிசுடன் நெய் விநியோகம் – ஆவின் நிர்வாகம்!!
கட்டுமான நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின் படி பொங்கல் பரிசுடன் ஆவின் நெய் வழங்க உள்ளதாக ஆவின் மேலாண் இயக்குனர் செய்தி வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு:
தமிழக அரசு வருடம் தோறும் வழங்கும் பொங்கல் பரிசு கொரோனா காரணமாக இந்த வருடம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பை இழந்து வாடி வருகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2,500 பணமும் வழங்குகிறது.
ஊரக திறனறிவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி- C.E.O அறிவிப்பு!!
கட்டுமானப் பணியாளர்கள்:
இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி, தமிழ்நாடு கட்டுமானப் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 2021ம் ஆண்டிற்கான சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கொள்முதல் ஆணை அடிப்படையில் வழங்குவதற்கு ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
4 கோடி தலித் மாணவர்களுக்கு ரூ.59,000 கோடி கல்வி உதவித்தொகை – மத்திய அரசு அறிவிப்பு!!
ஆவின் நெய்:
இதனால் 8 மாவட்ட கூட்டுறவு பால் கூட்டுறவு ஒன்றியம் மூலம், அனைத்து மாவட்ட நுகர்வோருக்கும் 100 மிலி அளவு கொண்ட நெய் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது 12,69,330 நெய் பாட்டில்கள் போர்க்கால அடிப்படையில் தயாராகி வருகின்றன. இவை அனைத்தும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு தயாரிக்கும் நெய் பாட்டில்கள் மீது ‘இது விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு 100% தரத்துடன் விநியோகிக்கப்படும். அதில், ஏதேனும் சேதம் இருப்பின் ஆவினின் அந்தந்த மண்டல அலுவலரின் அனுமதியுடன் மாற்றித்தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்