ஊரக திறனறிவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி- C.E.O அறிவிப்பு!!
மதுரையில் ஊரக திறனறிவு தேர்வு எழுத உள்ள 1600 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்விற்கான பயிற்சி அளிக்க இருப்பதாக மதுரை மாவட்ட C.E.O கூறியுள்ளார்.
தேசிய திறனாய்வு தேர்வு:
மதுரையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு 1600 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் வருடம் தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மருத்துவ உளவியலில் எம்ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்குனரகம்!!
ஆலோசனைக்கூட்டம்:
தேசிய திறனாய்வு தேர்வு வரும் ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர். ஆலோசனை கூட்டம் C.E.O. சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. அதில் தேர்வு ஒருங்கிணைப்பாளர் தென்கரை முத்துப்பிள்ளை, சி.இ.ஓ., நேமுக உதவியாளர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர ஜன.7 வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!!
ஆன்லைன் பயிற்சி:
ஆலோசனை கூட்டத்தில் சி.இ.ஓ., “ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 24 அன்று இத்தேர்வு எழுதுகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தேர்வில் இடம் பெறும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், திறனறிவு பகுதிகளை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் வீதம் ஜனவரி 31 முதல் வெபினார் செயலி மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவார்கள்”என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்