இதனை செய்யாவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் – வருமானவரித்துறை எச்சரிக்கை!
இந்தியாவில் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
பான் கார்டு
இந்தியாவில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களைப் போல பான் கார்டும் முக்கிய ஆவணமாக விளங்குகிறது. இன்றைக்கு வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களின் சேவையை பெற பான் கார்டு அவசியமாகிறது. இந்தியாவில் மத்திய வருமான வரித்துறை வரி ஏய்ப்புகளை தடுக்கவே பான் கார்டை வழங்கி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைப் பெற்று அதன் மூலம் பணம் மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. இதனை தடுப்பதற்காகவே ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.
Alert தமிழக மக்களே.. டிச.27 மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் – பராமரிப்பு பணிகள் எதிரொலி!
Exams Daily Mobile App Download
இந்த வேலையை முடிப்பதற்கு அரசு பல முறை காலக்கெடு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்னும் சிலர் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இந்த நிலையில் வரவிருக்கும் 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைவரும் கட்டாயம் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இல்லையென்றால் உங்களது பான் கார்டு செயலிழந்துவிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.