ஆதார் கார்டினால் தொடரும் பண மோசடி – உஷார் மக்களே!! பாதுகாக்க இது தான் வழி!!
ஆதார் கார்டை வைத்து பல்வேறு மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை பாதுகாக்கும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு:
இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு செயல்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய செயல்களுக்கும் ஆதார் கார்டு தேவைபடுவதால் சில நிறுவனங்கள் அதனை தவறாக பயன்படுத்தி ஆதார் எண்ணை வைத்தே வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால், ஆதார் கார்டினை தேவையில்லாமல் யாருக்கும் ஷேர் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய தேவைகளுக்காக ஆதார் கார்டு அனுப்பும் பட்சத்தில் நம்பக தன்மை வாய்ந்த நிறுவனமா என்பதை உறுதி செய்த பின்னரே அனுப்பவும்.
FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – இரட்டிப்பு லாபம்!! உடனே சேருங்க!!
அதே நேரத்தில், ஆதார் கார்டை பாதுகாப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சார்பில் மாஸ்க்டு ஆதார் என்கிற வசதியையும் மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, இந்த மாஸ்க்டு ஆதார் கார்டில் ஆதார் எண்ணின் கடைசி சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்துவதால் சிக்கல்களில் இருந்து தப்பிக்க இயலும். மேலும், மாஸ்க்டு ஆதார்கார்டினை ஆதார் அமைப்பின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்கிற பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.